Ananda Vikatan
VerifiedMagazine
Ananda Vikatan is a Tamil language weekly magazine published from Chennai, India. It was the second largest magazine in circulation within India, as of 2017. Source
Actions
Media Outlet details
| Scope | National |
|---|---|
| Language | English, Tamil |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
| Frequency | Weekly |
| Days Published | N/A |
Recent Articles
Search ArticlesVishal Garg அன்று 3 நிமிடத்தில் 900 பேரை பணியிலிருந்து நீக்கியவர்; இன்று அவரையே வெளியேற்றிய நிறுவனம்
Published:Just Now டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Finance நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த விஷால் கார்க், ஸ்டெர்ன் பிசினஸ் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு 'மைரிச்அங்கிள்' நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2014-ல் 'பெட்டர்' நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!
Published:2 mins ago பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘டிக்ளாசிஃபைட்: ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வரவிருக்கும் ஆவணத்தொடருக்கான நேர்காணலில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் எல்லை தாண்டிய பதிலடி குறித்த முக்கிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!
Published:3 mins ago சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ( உ.பாண்டி ) நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவது வழக்கம். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
சேலம்: Dalmatian... Poodle.. Native Breeds; அணிவகுத்த பலவகை நாய்கள் - பரிசுகளை வென்று அசத்தல்
சேலம்: நாய் காதலர்களுக்கான விழா! அழகான நாய்களின் அணிவகுப்பு, சிறந்த நாய்க்கு பரிசுகள். Published:10 mins agoUpdated:10 mins ago
``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்
Published:5 mins ago தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், `` நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எப்போதும் கவனமாக இருக்கிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வர்டை மாற்றுகிறேன். அதேபோல, எனது வீட்டின் வைஃபை (WiFi) கடவுச்சொல்லை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடுவேன்.
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்
Published:7 mins ago கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் ரோந்து பணியின்போது, மறைந்திருந்த 4 தமிழர்கள் மீது நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்
Published:1 min ago நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 4,000 கோடி எனத் தெரிவித்திருந்தார். "இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வசூலைச் செய்து லாபம் ஈட்டும்?" என்ற கேள்விக்குச் சமீபத்திய பேட்டியில் நடிகர் யாஷ் விளக்கமளித்திருக்கிறார். அவர், "ரூ.
அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்
Published:6 mins ago கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரியில் கஞ்சா புழக்கம் குறித்து தகவல் அளித்ததாலேயே அமுதன் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்
Published:Just Now முன்னாள் சபாநாயகர் அப்பாவு கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரியில் கஞ்சா புழக்கம் குறித்து தகவல் அளித்ததாலேயே அமுதன் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா
Published:2 mins ago சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூர்யா பேசுகையில், "வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர் வம்சி என இருவரும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள்; நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்.